கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.



இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 



மேலும், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



மேலும், தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு  நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்..



இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...