குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் - விவசாயிகள் பங்கேற்பு

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டார வேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் குண்டடம் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வனிதா மற்றும் சின்ன மோலார்பட்டி உதவி மருத்துவர் பிரகாசம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மை குழுக்கான மூன்று வளர்ப்பு கிடாரிகளுக்காக விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...