தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்டிஓ விடம் மனு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்டிஓ விடம் விசிகவினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில் கூறியிருப்பதாவது தாராபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருள்கள் விற்பனையை தடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, நகர துணை செயலாளர்கள் உதயகுமார், முருகவேல் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...