சிலை திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

அன்னூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சிறுமுகை அடுத்த ஆணைப்பள்ளி புதூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு குழதெய்வமாக இருக்கக் கூடிய இந்த கோவிலின் மூலவரான கருப்பராயன் சிலையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கடத்திச் சென்றனர்.

இது குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறுமுகை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறையின போதிய அக்கறையின்றி அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆணைப்பள்ளி புதூர் கிராம மக்கள் இன்று கோவில் அருகே திரண்டு சாமி சிலையை கடத்தியவர்களை கைது செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத சிறுமுகை காவல்துறையினரை கண்டித்தும் அன்னூர் சிறுமுகை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும், சிலை கடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அன்னூர்- சிறுமுகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...