இஸ்லாத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்- அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு

கோவையில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாருக் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் அன்சர்த் என்பவர் சரணடைந்த நிலையில், படுகொலைக்கு அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 



பாரூக்-ன் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று கோவை அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் உமர் கூறியதாவது :- 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். இது யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுளை மறுப்பதும், வணங்குவதும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அவ்வாறு வாழ்ந்த ஒருவரை கும்பல் ஒன்று கொலை செய்ததை இஸ்லாம் எந்த விதத்திலும் ஏற்காது. இந்த படுகொலையை அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

சில  தனிப்பட்ட நபர்கள் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது.

கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள அன்சார்த் எந்த ஜமாத்-திலும் இருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதவிகளை செய்வோம். 

இளைஞர்கள் சிலர் தீய வழியில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இஸ்லத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...