அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி - எனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் சாமிநாதன் பல்லடத்தில் பேட்டி

செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர் :அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கோடங்கிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரணம்பேட்டையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் எட்டு வருடங்கள் ஆகியும் எந்த பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாததால் பயன்பாடு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.



இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், ஊராட்சி தலைவர், ஆகியோர்செயல்படாமல் பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர்.



செயல்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்,



செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிடுகிறார்கள் எனவும் தெரிவித்தார். அதே போன்று சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கன்னத்திற்குரியது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த செய்தியும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...