குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்ற வேண்டும் - கோவை ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

நீண்ட்நாட்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


கோவை: குப்பைகளை அகற்றக் கோரியும் தீ வைப்பதை தடுக்க கோரியும் நீலிகோணாம்பாளையம் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்

கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.



இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...