வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா - தாராபுரத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் சார்பில் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சாமிநாதன் கயல்விழி ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துறைகள் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் சுமார் -120 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலை தேடுநர்கள் இங்கே வருகை தந்துள்ளார்கள் திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நான்காவது முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நூறு நிகழ்ச்சிகளை நடத்த அரசு திட்டமிட்டடது.



தொழிலாளர் நலத்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மூலம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையிலே இது 67-வது நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதி மணி, திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் சைகை மொழியை புரிந்து கொள்ளும் வகையில் சைகை நிபுணரை வைத்து உரையாடல்களை காது கேளா தோர் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...