பி.என்.புதூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைத்தால்,சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும்  என்பதால் உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி 41வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி இந்த வார்டு கவுன்சிலர் சாந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதமே மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



மேலும் அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதாகவும், அங்கு ஒரு மயானமும் இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனவும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உடனடியாக அந்த டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...