கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டி

அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பேண்டு வாத்திய போட்டியில், 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கடந்த 1944 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சமூகம் சார்ந்த பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருகிறது.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 22 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் பேண்ட் வாத்திய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.



இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான பேண்டு வாத்திய போட்டி அவினாசி சாலையில் உள்ள மணி மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில் 17 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகளை, ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் மூத்த வழக்கறிஞர் ரொட்டேரியன் ஏ கே எஸ் சுந்தர்வடிவேலு துவக்கி வைத்தார்.



போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வண்ண மயமான பேண்டு வாத்திய சீருடை அணிந்தபடி, போட்டியில் தங்கள் இசைத் திறமை, உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நேர்த்தியாக வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.

இதில் நடுவர்களாக பி ஆர் எஸ் பேண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு சிறந்த குழுவினரை தேர்வு செய்தனர். கலப்பு,மற்றும் மாணவர் குழு, மாணவியர் குழு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கலப்பு பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி, மாணவியர் பிரிவில் அவிலா கான்வெண்ட், மாணவர் பிரிவில் லாரன்ஸ் பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.



தொடர்ந்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த பேண்ட் வாத்திய குழுவினருக்கு ரொக்க பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் சுந்தரவடிவேலு வழங்கி கவுரபடுத்தினார். நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் விஜய், செயலாளர் பாலசுப்ரமணியன், சேர்மன் குணசேகரன் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...