கோவையில் கறிக்கோழி விற்பனையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி - சென்னை வியபாரி கைது

கொள்முதல் செய்த கறிக்கோழிக்கு தரவேண்டிய ரூ.47 லட்சம் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாக இருந்த செந்தில் மோகன் என்ற கறிக்கோழி வியபாரியை, தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் மோகன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வி எம் சி புரோட்டீன் என்ற பெயரில் கறிக்கோழி விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதற்கான உயிர் கறிக்கோழிகளை கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சிக்கன் என்ற நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவில் இருந்த செந்தில் மோகன் கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யும் கறிக்கோழிக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதை அடுத்து கறிக்கோழி மொத்த விற்பனை மைய மேலாளர் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துமாறு கூறவே திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த செந்தில் மோகனை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கூறி அந்நிறுவன மேலாளர் பாலகுமாரன் என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தலைமறைவான செந்தில் மோகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் மோகன் சென்னையில் இருப்பது தெரிய வந்த நிலையில் சென்னை சென்ற தனிப்படையினர் செந்தில் மோகனை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில்15 நாள் காவலில் செந்தில் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...