தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணிக்க தனிப்படை

தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் முக்கிய கடைவீதி பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூத்தாடைகளை வாங்கி வருகின்றனர். ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் மாநகர காவல் துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே அப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,



தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வழிப்பறி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களின் புகைப்படங்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய கடைவீதி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக முழுவதும் பெண் காவலர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சூழலில் இந்த ஆண்டும் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த விதத்திலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...