விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் அறிவுரை

உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு என்பதால் மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இரத்தினம் கல்விக் குழுமத்தில் "இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமி " திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர் எல்.முருகன், இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியினை தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்.



பூப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் என பல விளையாட்டு மைதானங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களின் மொத்த மதிப்பு சுமார் மூணு கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் அவர் பேசுகையில்," உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு ஆகும். மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். நமது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளனர். அதேபோல் இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ, மாணவியரும் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் பேசுகையில்,"நமது இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ,மாணவியர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே இந்த இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நோக்கமாகும்" என்று கூறினார்.

இந்த விழாவில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முனைவர்.மாணிக்கம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் முனைவர்.பா.நாகராஜ் மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களைச் சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...