அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது தொடர் மழையால் அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து 1500 கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி அனைத்து நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர் பாம்பாறு தூவானம் காந்தளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து 200, 300 கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது இடைவிடாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு தற்சமயம் 1619 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மொத்த 90 அடியில் தற்பொழுது 59.65 அடியாக உள்ள நிலையில் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...