நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெறும் - சுதாகர் ரெட்டி பேட்டி

தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு அவர்களின் கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.



முகாமில் தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளிடம் பேசும் பொழுது, வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆகவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.



மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் உட்பட மாநில மண்டல மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...