உடுமலை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

பெரியபட்டி அருகே இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மயிலை, வனத்துறையினர் விரைந்து வந்து மீட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் உணவகம் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்துவருபவர் வெள்ளசெட்டிபாளையத்தை சார்ந்த கார்த்திகேயன்.

இவர் பல்லடம் சாலையில் பெரியபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மயில் ஒன்று சாலை ஒரத்தில் இறக்கை மற்றும் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் வேதனையுடன் இருப்பதை கண்டு என்னசெய்வது என தெரியாமல் அதன் அருகிலேயே நீண்டநேரம் நாய்கள் கடித்திடாவாறு பாதுகாத்து நின்றார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் உதவி இயக்குநர் கணேஸ்ராம் அவர்களுக்கு தகவல் கொடுக்க உடனடியாக செயல்பட்ட அவர் மயிலை மீட்க சம்பவ இடத்திற்கு வனத்துறையினரை அனுப்பினர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு சிகிச்சைகாக எடுத்து சென்றனர்.

அடிபட்டுகிடந்த மயிலுக்கு நாய் உள்ளிட்ட மிருகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து நின்ற கார்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்த உடன் விரைந்துவந்த மயிலை மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினர்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...