உடுமலையில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி - கோபி அணி வெற்றி

சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ராகல்பாவி பிரிவு அருகே உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரேணுகாதேவி லெப்டினேட் சுபாஷ் அறக்கட்டளை சார்பில் மாநில அளவில் கல்லூரி மகளிருக்கான கைப்பந்து போட்டி நேற்று இரவு முதல் மூன்று நாட்களுக்கு 14 போட்டிகளாக நடைபெறுகிறது.



இதில் சென்னை, மதுரை, சேலம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த அணிகள் கலந்து கொள்கிறது. முதல் போட்டியை தொடங்கியது. போட்டியை அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.ஆர் செல்வராஜ், உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அதைத் தொடர்ந்து சென்னை அணியும் கோபிசெட்டிபாளையம் அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் 2:1 என்ற புள்ளி கணக்கில் கோபி அணி வெற்றி வெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை ஜேபிஆர் பல்கலைகழகம் அணி கல்லூரி அணியும், தமிழ்நாடு தபால் துறை அணியும் மோதியதில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு தபால் துறை அணி 2:2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்றது.

அப்போது போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளை சக வீராங்கனைகளும், பொதுமக்களும் உற்சாகப்படுத்தினார்கள். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலமுருகன், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சத்யம் பாபு, அமராவதி ராணுவ பயிற்சி பள்ளி ஆசிரியர் இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...