கோடை கால சிறப்பு ரயில் சேவை அறிமுகம்

கோடை காலத்தினை முன்னிட்டு சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

1. சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி (விருதாச்சலம், அட்டூர், சேலம், கரூர் வழியாக வரும்) சிறப்புக் கட்டணம், சிறப்பு ரயில்

ரயில் எண் 06047 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் சென்னை எக்மோரில் இருந்து மார்ச் 21, 24, 28 ஆகிய தினங்களில் 7.40 மணியளவில் புறப்படும். திருச்சிராப்பள்ளியை 18.30 மணியளவில் சென்றடையும்.

ரயில் எண் 06048 சென்னை எக்மோர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 20, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணியளவில் புறப்பட்டு சென்னை எக்மோருக்கு 18.45 மணிக்கு அதே நாளில் சென்றடையும்.

பெட்டிகள்: ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், எட்டப்பூர் ரோடு, வழப்பாடி வாசல், அயோத்திப்பட்டனம், சேலம் டவுன், சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை மற்றும் திருச்சி சென்றடையும்.

ரயில் எண் 06048 திருச்சிராப்பள்ளி- சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. ரயில் எண் 06049 திருச்சிராப்பள்ளி - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து மார்ச் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 6 மணியளவில் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்தை 14.30 மணிக்கு சென்றடையும்.

பெட்டிகள்- ஸ்லீப்பர் கிளாஸ்- 2, இரண்டாம் வகுப்பு சேர்கார் (முன்பதிவு) - 5, பொது இரண்டாம் வகுப்பு - 8, பொருட்களை கொண்டு செல்ல 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தம்: திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், குப்பம் மற்றும் பங்காரப்பேட்டை.

மேலும், விபரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...