தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறைத் தலைவர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். ஊழலை ஒழிப்பதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ரா.சிவசாமி சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் ரா.சிவசாமி கூறியதாவது, சிறப்புரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...