திருக்காட்டுப்பள்ளியில் ஒருவர் கொலை - குற்றவாளிகள் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் குமாருக்கும் அவரது முன்னாள் நண்பர் பவுசு செந்திலுக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குமார் தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை 3 பைக்குகள், ஒரு காருடன் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழ விழுந்த குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில், பவுசு செந்தில், சாமி ரவி, மோகன், பிரசாந்த்.



கடமுடா மணி, குட்டி என்கிற பிரவின் ஆகிய 6 பேர் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் 6 பேரையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இன்று அந்த ஆறு பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரூபா முன்பாக நேரில் ஆஜராகி உள்ளனர்.



இந்நிலையில் 6 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...