10வது வார்டு மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றிய வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல்

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது.


கோவை: அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்த பகுதி மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால், தந்தை பெரியார் நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...