தாராபுரத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி வட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வேளாண் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்றைய தினம், தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் நிலக்கடலை சாகுபடி, பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பருத்தி சாகுபடி செய்து வருவதையும் மற்றும் தொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குறைந்த செலவு வெங்காய சேமிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...