தாராபுரம் நகர் பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா - நேரில் ஆய்வு செய்த ஆர்டிஓ

தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.


திருப்பூர்: வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்துள்ளார்.

தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர். அதற்கான தீர்வு கான வேண்டி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை நிறைவேற்றும் வகையில் பட்டா இல்லாத அனைத்து வீட்டிற்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன்படி நகராட்சி தலைவர் மக்களின் கோரிக்கை மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சேர்த்து ஆர்.டி.ஓ.செந்தில் அரசனிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ. கூடிய விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ. காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது “ நகராட்சி தலைவர் மூலம் வீட்டு மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு தடை சான்று வழங்க நேரில் ஆய்வு செய்யப்பட்டு மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தாசில்தார் கோவிந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி உடன் இருந்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...