குண்டடம் பகுதியில் வாழை சாகுபடி - எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.


திருப்பூர்: பனிப்பொழிவு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என குண்டடம் வாழை விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் ருத்ரவாதி, குண்டடம், முத்துகவுண்டன்பாளையம், இடையப்பட்டி, தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது :- இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வாழை சாகுபடி செய்துள்ளோம். நாட்டு நேந்திர ரக வாழை சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்ய வாழை கிழங்கு, உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

வாழை வாழை கிழங்கு நடவு செய்து 1 வருடத்தில் வாழைதார் விற்பனைக்கு அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வாழை தார் கிலோ ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.

இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போல் நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...