ஆனைமலை அருகே அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர்.


கோவை: மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வின்போது, பிடிப்பட்ட மூன்று டிப்பர் லாரிகளை, கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், பறிமுதல் செய்து,ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் பகுதியில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலத்துக்கு கற்களை ஏற்றிச் சென்ற, கேரள பதிவு எண் கொண்ட, மூன்று டிப்பர் லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல், ஏழு யூனிட் அளவுள்ள கற்களை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

வாகனங்களை பறிமுதல் செய்து, ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்ற மூன்று லாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...