தீபாவளி போனஸ் கேட்டு கோவையில் எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கட்டட தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.



தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.



மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தமிழ்நாடு எஐடியுசி அமைப்பினர் கோவை பழைய தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மேற்கொண்டனர்.



முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...