உடுமலையில் முறைகேடாக மது விற்பனை 4 பேர் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவாட்டம் உடுமலையில் முறைகேடாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: முறைகேடாக மது விற்பனை செய்தவர்களை தனிப்படை அமைத்து திருப்பூர் காவல்துறை கைது செய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சில்லறை மது விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடுமலையைச் சேர்ந்த முஸ்தபா(54), மடத்துக்குளம் தாலுக்கா கணியூரை சேர்ந்த முகமது ஷேக்(32), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்(35), மதுரை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(38) ஆகியோர் சில்லறை மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 281 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...