சி.ஐ.டி.யு சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி, பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளதுபோல், எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை எனில், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல என சி.ஐ.டி.யுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'வாரிய பணியாளர்களுக்கு, தன்னிச்சையாக போனஸ் அறிவித்தது கண்டிக்கத்தக்கது, பணியாளர்களுக்கு லாபத்திற்கேற்ப போனஸ் அறிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்களை, 70க்கும் மேற்பட்டோர் எழுப்பினர். சங்க பொதுச் செயலாளர் சரவணன் கூறுகையில், கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தற்போது, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் போக்குவரத்துக்கழகம், மின் வாரிய ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. எனவே, எங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்றார். கோரிய போனஸ் தொகையை வழங்கவில்லையேல், பண்டிகை சமயத்தில் குடிநீர் வினியோகம் தடைபட்டால் தொழிற்சங்கமோ, தொழிலாளர்களோ பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...