கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை

கோவையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரங்கசாமி மகன் முருகேசன் (27) மற்றும் முத்து மகன் சுப்பிரமணி (43) ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகேசன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான சுப்பிரமணிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கினை புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆஜர்படுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...