ஊராட்சி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சி சார்பில் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, உள்ளிட்ட உபாதைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.



கோவை குருடம்பாளையம் ஊராட்சி மற்றும் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை குருடம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.



இதில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மைய மருத்துவர்கள் பாரதி, முத்துக்குமார் ஆகியோர் எலும்பு தேய்மானம், கழுத்து வலி, இடுப்பு வலி, கால் முட்டி வலி, கால்பாத உணர்ச்சி இன்மை, கால்பாத எரிச்சல், இடுப்பு ஜவு விலகல் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



மேலும் முகாமில் இலவசமாக பல் பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூபாய் 1500 மதிப்பு எலும்பு சத்து பரிசோதனை 50 ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் ஏ.எல்.ஆரோக்யா முதுகு தண்டுவட சிகிச்சை மையம், துடியலூர் லட்சுமி மருத்துவ மனை, வாசன் ஐ கேர், பி.வி.கே. டெண்டல் கேர், மற்றும் துளசி பார்மஸி உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு மருத்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, உள்பட சுற்றுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...