மடத்துக்குளம் அருகே இலவச மருத்துவ முகாம் - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடந்த இலவச மருத்துவமுகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக, லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் துவக்கி வைத்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சாகுல் அமீது மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நரசிங்கபுரம் கிளைக் செயலாளர் ராஜ்மோகன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், முருகானந்தம், கோபால்சாமி எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் மைவாடி ஊராட்சி செயலர் முகமது இஷாக் உட்பட மருத்துவர்கள் பரமசிவம், கௌரி பரமசிவம், கார்த்திக் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...