டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஓன்றியம் வாகத் தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வி. வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.



அந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில் தொழவு, வி.வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை நெகமம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதால் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடை அமைவதால் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை டி எஸ் பி சுகுமாரன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை இடமாற்றம் செய்யபடும் என உறுதி அளிக்கபட்டதால் தற்காலிமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அரசு மதுபான கடை திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை நெகமம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கபட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...