பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியான வன்முறையும், தலித் விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்

கோவையில் பாரூக் என்ற திராவிட கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது எனவும், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்களும் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

கோவையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக விமான நிலையத்தில் சந்தித்தாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றியது போல நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பணபட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்கள் நல கூட்டணியானது கருத்து வேறுபாடுகளுடன் அதில் உள்ள கட்சிகள்  ஒன்றாக இருந்து வந்ததாகவும் தேர்தலில் போட்டியிடாத  சி.பி.ஐ , விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் பாரூக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என கூறியவர் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் மதரீதியாகவும், தலித் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனவும் குற்றச்சாட்டினார். 5 மாநில தேர்தல் காங்கிரஸ் தோல்வி என்றோ, பா.ஜ.கவிற்கு வெற்றி என்றோ எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோவாவி அதிக இடங்களை காங்கரஸ் வெற்றி பெற்றிருந்தும்  குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சியை பா.ஜ.க அமைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு  தமிழக அரசு நிதி ஓதுக்கி இருப்பது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்த அவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்க காரணமானவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...