கோவாவில் நடைபெறும் களரி பயட்டு போட்டி - உடுமலை வீரர்கள் எட்டு பேர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டுப் களரி பயட்டு போட்டியில் தமிழக அணி சார்பாக உடுமலை வீரர்கள் 8 பேர் கலந்து கொள்கின்றனர்.


திருப்பூர்: உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் களரி பயட்டு போட்டியில் பங்கேற்கும் உடுமலை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

தேசிய அளவிலான 37 வது களரிப்பயட்டு போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 தேதி கோவாவில் நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் வீ ஜீவா, கே.ருத்ரேந்தர், டி.விக்னேஸ்வரன், எம்.முத்துச்செல்வம், வி.தரன், எம்.விக்னேஷ், ஆர்.ராமசந்திரன், கே.விசாலி ஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர், எஸ்.ஆர்.எஸ்.செல்வராஜ் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி பணி நிறைவு நூலகர், கணேசன் ஜிவிஜி காசாளர், சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும். அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம் மாதம் தொடங்குகிறது போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். களரிப் பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 & 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300 மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்களைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பாக 8 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏழு வகையான பிரிவுகளில நடைபெறுகின்றது.

சுவடு, மெய்பயட்டு, உருமிவீசல், சவுட்டி பொங்கல், கைப்போர், கேட்டுக்கரி வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...