உடுமலை அருகே பராமரிப்பு இன்றி காணப்படும் சமுதாய நலக்கூடம் பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பராமரிப்பின்றி இருக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பூர்: குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை அளிக்கும் சமுதாய நலக்கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரியவாளவாடி ஊராட்சியில் வாரச்சந்தை வளாகம் உள்ளது. இந்த சந்தை வளாகத்தில் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பல்வேறு சுப நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்த அந்தக் கட்டிடத்தை முறைப்படி பராமரிப்பு செய்யவில்லை. இதன் காரணமாக கட்டிடம் படிப்படியாக சேதம் அடைந்து தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ளது.

மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அந்த கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துகள்கள் உதிர்ந்து கீழே விழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது.அதை இடித்து அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.

இதனால் சந்தை வளாகத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு பொதுமக்களை காப்பாற்றும் கடமை அதிகாரிகளை சார்ந்ததாகும். எனவே வாளவாடி வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...