உடுமலை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதலால் கைகலப்பு ஏற்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.
திருப்பூர்: குடிநீர் கேட்டு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக மற்றும் பொதுமக்கள் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது திமுகவை சேர்ந்த சங்கராம பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது அதிமுக திமுக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது இதில் திமுகவில் பேரூர் கழக இளைரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் என்பவருக்கு மண்டை உடைந்தது.
அதிமுகவில் எம்ஜிஆர் இளைரணி செயலாளர் சந்தோஷ் கௌதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். திமுகவைச் பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர். சந்தோஷ் கௌதம் கருப்புசாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடுமலை அருகே குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக மற்றும் பொதுமக்கள் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திமுகவை சேர்ந்த சங்கராம பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது அதிமுக திமுக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது இதில் திமுகவில் பேரூர் கழக இளைரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் என்பவருக்கு மண்டை உடைந்தது.
அதிமுகவில் எம்ஜிஆர் இளைரணி செயலாளர் சந்தோஷ் கௌதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். திமுகவைச் பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர். சந்தோஷ் கௌதம் கருப்புசாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடுமலை அருகே குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.