கோவை துடியலூரை அடுத்த பன்னீமடையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வீடுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஊதியம் உயர்த்தி வழங்கக் கோரியும், வீட்டுமனைப் பட்டா வேண்டும் எனவும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோவை: ஊதிய உயர்வு மற்றும் வீட்டுமனைப்பட்டா கேட்ட தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நேற்று நடைபெற்றது.

இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.

அப்போது கோயில் வாசலில் காத்திருந்த பன்னீர்மடை ஊராட்சியில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை என்றும், அதிகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மேலும் குடியிருப்பதற்காக வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனை கேட்ட அமைச்சர், உடனடியாக ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம் ரத்தினம் மருதாசலத்தை அழைத்து வீட்டு மனைப் பட்டா வழங்க அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து வீட்டுமனை குறித்து பரிசிலினை செய்து உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசிலினை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அமைச்சர் முத்துசாமிக்கு கோவில் கமிட்டியினர் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கோயில் கமிட்டியினர், திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நேற்று நடைபெற்றது.
இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.
அப்போது கோயில் வாசலில் காத்திருந்த பன்னீர்மடை ஊராட்சியில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை என்றும், அதிகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மேலும் குடியிருப்பதற்காக வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனை கேட்ட அமைச்சர், உடனடியாக ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம் ரத்தினம் மருதாசலத்தை அழைத்து வீட்டு மனைப் பட்டா வழங்க அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து வீட்டுமனை குறித்து பரிசிலினை செய்து உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசிலினை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அமைச்சர் முத்துசாமிக்கு கோவில் கமிட்டியினர் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.
அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கோயில் கமிட்டியினர், திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.