உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர்: பொதுக்கிணற்றில் மீன்கள் உயிரிழந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.
பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.
பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.