உடுமலை நகராட்சி 4-வது வார்டில் உள்ள பொது கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருப்பூர்: பொதுக்கிணற்றில் மீன்கள் உயிரிழந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.

பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...