போர் தொடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிர்ப்பு – திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொடூர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணவத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதல்கலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு - ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 7- ந் தேதி தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலிய இராணுவம் கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சட்டங்களை மதிக்காமலும், மனித உரிமைகளை புறந்தள்ளி, கொடூரமான இன அழிப்பு முன்னெடுத்து வரும் இஸ்ரேலையும், அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும், திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தை கண்டித்தும், அமெரிக்கா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...