தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறையினர் சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை கவிதைகளாக கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...