அன்னூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - அரிசி மண்டிக்காரர் போக்சோவில் கைது

அன்னூர் அருகே இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரிசி மண்டி நடத்தி வரும் நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: பாலியல் தொல்லை கொடுத்த நபரை தாக்கிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னுார் அருகே ஆறு மற்றும் ஒன்பது வயது சிறுமிகளுக்கு அரிசி மண்டி நடத்தி வரும் செல்வகணேஷ், 51, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வகணேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த செல்வகணேஷை தாக்கிய கணேசபுரம் மற்றும் கோவில்பாளையத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...