கோவை மாநகராட்சியில் செயல்படும் அரசு மாணவர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிகள், ஆதிதிராவிடர் மாணவர்களின் நல விடுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் உண்டு பரிசோதித்தார்.



மேலும் அங்கு தங்கியுள்ள மாணவர்களிடமும் அங்குள்ள வசதிகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை உடன் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் நல விடுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...