இஸ்ரேல் பாலஸ்தீன போர் - கோவையில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் கோவை டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.



இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் கோவை டாடாபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் பெரியாரிய, மார்க்சிய, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...