தாராபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தாராபுரம் வட்டாரப் பகுதியில் அரசு விதித்துள்ள எந்தொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பட்டாசு கடைகள் அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அண்மைகாலமாக ஏற்படும் பட்டாசு விபத்துக்களை கருத்தில் கொண்டு அனுமதியில்லாமல் அமைக்கும் கடைகளை அரசு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தாராபுரம் வட்டார பகுதியில் பட்டாசு கடைகள் நடத்த தனியார் கடை உரிமையாளர் ஆங்காங்கே தற்காலிக செட் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆண்டு தோறும் 8 கடைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தாராபுரம் வட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அனுமதியில்லாமல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதுவும் குடியிருப்புகள், பெட்ரோல் பங்குகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசு கடை நடத்த அனுமதி இல்லை. ஆனால் மேற்கூறிய பகுதிகளில் அதிகமாக கடை நடைபெற்று வருகிறது. தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையினர், போலீஸ் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் பரிந்துரை செய்த பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்ற பிறகு கடை அமைக்க வேண்டும்.

அப்போது அரசு விதிமுறைகள் பின்பற்ற தேவையான தீ அணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்காலிக கடை உரிமையாளர் எந்த நடைமுறைகளையும் கடைபிடிப்பது இல்லை. சமீபத்தில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு வெடித்து பலர் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கும் கடைகளில் சீன பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும், அனுமதியில்லாத கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசுகளை வாகனங்களில் இருந்து இறக்கி வைக்கும் போது பட்டாசுகள் வெடித்து பலர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...