தாராபுரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி காவலர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பொள்ளாச்சி சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சாலையில் வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது,சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...