உடுமலை சௌடாம்பிகா அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் 25ஆம் தேதி இன்று முதல் நவராத்திரி விழா நடைபெறும் நிலையில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மாரியம்மன் கோவில் குருக்கள் உமா மகேஸ்வரன் தலைமையில் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.



பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மஞ்சள் கயிறு, வளையல் மற்றும் குங்குமம் அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருகல்யாண வைப்போகத்தை கோவில் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...