அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம்ம் கழுதகட்டி ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் ரோந்து சென்றபோது கழுதகட்டி ஓடை பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது ஆண் புலி இறந்து கிடப்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.



தற்சமயம் திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார்கள். இறந்து கிடைக்கும் புலி உயிர் இழந்தது எவ்வாறு, யாரேனும் வேட்டையாடினார்களா அல்லது வயது மூப்பின் காரணமாக புலி இறந்தாத என தேசிய புலிகள் ஆனைய வழிகாட்டுதல்படி புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபின் தான் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் மர்மமான முறையில் புலி உயிர் இழந்து உள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...