சௌடேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா - கத்தி போட்டு அம்மனை அழைத்த பக்தர்கள்

கோவை வெள்ளக்கிணர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி கொலு விழாவில் பக்தர்கள் மார்பு மற்றும் கைகளில் இரத்தம் சொட்ட கத்தி போட்டு பரவசத்துடன் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


கோவை: சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.

கோவை வெள்ளக்கிணரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்கார பூஜை நடைபெற்று பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.



தொடர்ந்து தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னதாக அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் ஏற்றி அதன் முன்பு பக்தர்கள் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மன் சப்பரம் ஊர்வலம் ஆக புறப்பட்டு கோயில் வரும் முன்பு ஆலங்கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவசமான நிகழ்ச்சியில் இளைஞர்கள் கைகளில் கூர்மையான கத்தியைக் கொண்டு மார்பு மற்றும் இரண்டு கைகளில் வெட்டி இரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.



சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கலர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ வெள்ளை தாமரை வீர குமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...