நிலவுக்கு இந்தியா மனிதனை அனுப்ப 10 ஆண்டுகள் ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை தகவல்

நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது, சில வருடங்களில் அது நடக்கும், இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் கோவையில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


கோவை: நிலவுக்கு இந்தியா மனிதனை அனுப்ப 10 ஆண்டுகள் ஆகும் என மயில்சாமி அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.



பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுதந்திரந்திற்கு பின் 30 ஆக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் 72 ஆக அதிகரித்து இருக்கின்றது என்றார். இதயம் எப்படி முக்கியமோ, அதுபோல பல் முக்கியம் எனவும், இருதய அறுவை சிகிச்சை எப்படி பல மாற்றங்களை தாண்டி இருக்கின்றதோ, அது போல பல்லின் சிகிச்சையும் பல மாற்றங்களை சந்தித்து இருக்கின்றது என தெரிவித்தார்.

விக்ரம் லேன்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே அதற்கான ஆயுட் காலம் நிறைவு பெற்றது. பிரஞ்ஞான் அலைவரிசை, விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால் தான் தகவல் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் இப்போது பிரஞ்ஞான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது எனவும், சந்திராயன் 3 பணி நிறைவடைந்து இருப்பதாகவே நான் பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

ரோவருக்கு புதிய ஆபத்து வருகிறதா என்ற கேள்விக்கு சந்திரனில் விண்கற்கள் விழுவது என்பது சகஜம் எனவும் பூமியிலும் விழுகின்றனம், இங்கு வாயு இருப்பதால் எரிந்து விடுகின்றன எனவும் , ஆனால் நிலவில் அவ்வாறு இல்லாததால் விழுகலாம் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என பதிலளித்தார்.

ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது எனவும், இது சிறு அங்கம்தான் என்றார். ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது எனவும், இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், இதில் பல கட்டங்களை தாண்ட வேண்டும் எனவும், இது முதல் கட்டம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

குலசேகரபட்டினம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் , ஏவுதளம் அமைப்பதை தாண்டி, எரிபொருள் தயாரிப்பது உட்பட திட்டங்ளை கொண்டு செயல்பட அது சிக்கனமாக ஏவுதளமாக அமையும் எனவும், சிறிய ரக செயற்கை கோள்கள்தான் இப்போது அனுப்பபடுகின்றது. தினமும் ஒன்று ரெண்டு அனுப்பும் நிலை வரலாம், அப்போது சிறப்பான இடமாக குலசேகரபட்டினம் ஏவுதளம் இருக்கும், அதற்கான கட்டமைப்புகள் வரும் போது பலன் அளிக்கும் எனத் தெரிவித்தார்.

தமிழக அளவில் விஞ்ஞானிகளுக்கு அரசு சார்பில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது உந்து சக்தயாக இருக்கும் எனவும் சர்வதே விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும், இந்தியா வழி நடத்த வேண்டும் எனவும், அப்போதுதான் பிரச்சினைகள் வராது என தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாக கூடாத இடமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விண்வெளி துறையில் இந்தியாவின் முன்னெடுப்புகள் வர்த்தக ரீதியாக பல நாடுகள் இந்தியாவை நோக்கி வரவழைக்கும் எனவும்,நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது, சில வருடங்களில் அது நடக்கும், இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்தார். ஆயுட் காலம் நிறைவடைத்த பின்பு விண்களங்களை திரும்ப கொண்டு வருவது குறித்து இப்போதே ஆலோசிக்கபட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...