பல்லடம் அருகே குடிநீர் வசதிகேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் முறையான சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக ஊராட்சி தலைவர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11 வது ஓம் சக்தி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இப்பகுதியில் முறையான சாலை வசதி அமைத்து தர கோரியும் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் உள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த ஊராட்சி தலைவர் இன்னும் நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை சரி செய்வதாக உறுதியளித்ததன் பிறகு அங்கிருந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...